Categories
தேசிய செய்திகள்

தரைமட்டமான கட்டிடம்…. மூன்று சடலம் கண்டெடுப்பு…. தொடரும் மீட்பு பணி…!!

உத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உத்திரகாண்டத்தில் கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்த மூன்று நபர்களின் சடலங்கள் மீட்பு.
உத்திரகாண்ட் மாநிலத்திலுள்ள டோராடூன் சுக்குவாலா பகுதியில் உள்ள ஒரு கட்டிடமானது இன்று காலை இடிந்தது. அப்போது கட்டிடத்தில் தூங்கிக்கொண்டிருந்த வேலையாட்கள் பெரும்பாலானோர் இடிபாட்டில் சிக்கினர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது உயிரிழந்த 3 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டும் சிலர் காயத்துடனும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் மட்டுமன்றி மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Categories

Tech |