முன்விரோதம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர் பகுதியை சேர்ந்த வண்ணமணி என்பவருக்கு கோவேந்திரன், மற்றும் புகழேந்தி ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதில் புகழேந்தி என்பவர் திருச்சி தில்லை நகரில் இருக்கும் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.
பின்னர் புகழேந்தி தன்னுடைய நண்பர் சதீஷ் என்பவருடன் பைக்கில் பாச்சூருக்கு சென்று கொண்டிருந்தனர்.. அப்போது காரில் வந்து வழிமறித்த 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் புகழேந்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.. இதில் பலத்த படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் நண்பர் சதீஷையும் வெட்டியதால் அவரும் படுகாயமடைந்தார்..
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீசார், புகழேந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் படுகாயமடைந்த சதீஷ் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக வங்கி ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.