12 வனத்துறை அலுவலகங்களை மாவோஸ்ட் வெடிகுண்டு வைத்து தகர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில சிங்பம் மாவட்டத்தில் பெர்கேலா வனப் பகுதிக்கு அருகே வனத்துறை அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு நேரம் அலுவலகத்தில் உள்ளே நுழைந்த மாவோஸ்ட் அங்கு இருதவர்களை அடித்து வெளியேற்றி விட்டு தங்கள் வைத்திருந்த வெடிபொருள்கள் மூலமாக 12 வனத்துறை அலுவலகங்களையும் ஒவ்வொன்றாக வெடிவைத்து அழித்தனர். அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்நிகழ்வை குறித்து பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் வனப்பகுதியிலுள்ள மாவோஸ்ட் அனைத்து இடங்களிலும் தேடும் பணியானது வேகமாக செயல்பட்டு வருகிறது.