Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,38,470 ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.

ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகின. அதில், தமிழகத்தில் இன்று மட்டும் 4,244 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,226ல் இருந்து 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 42,531 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான  பரிசோதனை இதுவரை 16,09,448 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.  இன்று மட்டும் 3,617- பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 89,532 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 64.66 % பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 1,966-ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 46,969 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று மட்டும் 1,168 பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது 17,469 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |