டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி 3ஆவது இடத்தை பிடித்துள்ளது.. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் மருத்துவர்கள் மன அழுத்தத்துடன் பணி செய்து வருவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் விடுதியில் தங்கியிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் ஜுனியர் டாக்டர் அனுராக் குமார் Anurag Kumar (25).. இவர் மொத்தம் 18 மாடிகளை கொண்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விடுதியில் 10 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மொபைல் போன் விடுதியின் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மருத்துவர் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.