குன்னம் அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்பாபு.. வயது 23 ஆகிறது.. பொறியியல் பட்டதாரியான இவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சேலத்தில் தலைமறைவாகயிருந்த ஆனந்த்பாபுவை கைது செய்த போலீசார், சிறுமியையும் மீட்டு பெரம்பலூர் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.. மேலும், 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையிலடைத்தனர்.