பழங்காலம் தொட்டு சோற்று கற்றாழை மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. அதில் இருக்கும் மருத்துவகுணங்கள் பற்றிய தொகுப்பு
1. புற்றுநோய் செல்கள் மீண்டும் மீண்டும் வளரக்கூடியவை இத்தகைய தீமையான செல்களை அழித்து ஆரோக்கியமான செல்களை உடலில் வளர செய்வதற்கு கற்றாழை பயன்படுகிறது.
2. சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக் கதிர்கள் அதீத அளவில் நமது தோளில் பட்டுக் கொண்டிருக்கும் போது நம்மில் பலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் மற்றும் தோல் புற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கற்றாழை சாறு அல்லது கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை கோடை காலங்களில் நமது மேற்புற தோலில் பூசி கொள்வதால் சரும நோய்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க முடிகிறது.
3. கற்றாழை எண்ணெய் அல்லது கற்றாழை தண்டுகளில் இருந்து கிடைக்கும் ஜவ்வு போன்ற படலத்தை புண்களின் மீது தடவி வருவதால் புண்கள் சீக்கிரம் மாறுவதோடு மட்டுமல்லாமல் அழுத்தமான தழும்புகளை ஏற்படுவதையும் தடுக்கிறது.
4. பெண்கள் அனைவருமே தங்களின் முக தோற்றம் பொலிவுடன் இருக்க இன்றைய காலத்தில் தீமை உண்டாகும் ரசாயனங்கள் அதிகமுள்ள அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை நன்கு அரைத்து முகம் முழுவதும் பூசிக்கொண்டு கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை நீங்கி முகம் பொலிவுபெறும் அதோடு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.
5. தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை சிறிதளவு மென்று சாப்பிட்டு வந்தால் உடல் ஈறுகள் பலம் பெறும். பற்களில் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பதிலும் கற்றாழை உதவுகிறது.
6. தினசரி சரியாக மலம் கழிப்பதால் உடலில் நோய்கள் ஏற்படாது என்பது மருத்துவ ரீதியான உண்மை. ஆனால் இன்று பலரது தவறான உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளால் மலச்சிக்கல் ஏற்பட்டு அவர்களின் பாடாய்படுத்துகிறது. தினமும் காலையில் சிறிதளவு தோல் நீக்கிய கற்றாழை ஜூஸ் போட்டு அல்லது அப்படியே மென்று சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
7. வயிறு, குடல் போன்ற ஜீரண உறுப்புகளில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் கற்றாழை பல்லாண்டுகளாக சிறந்த மருத்துவ மூலிகையாக நமது சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கற்றாழையில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் நச்சுத்தன்மையை நிறைத்த ரசாயனங்களை செயலிழக்கச் தன்மை கொண்டதாகும்.
8. கற்றாழை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளிலும் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் நலத்தை மேம்படுத்துகிறது குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்களாக இருக்கின்றனர்.
9. கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் நைட்ரிக்அசின் சைட்டோகைனின் போன்ற வேதிப் பொருட்களின் உற்பத்தியை நமது உடலில் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சராசரியான விகிதத்தில் காற்றாழை பயன்படுத்துவது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
10. அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் படி கற்றாழை தண்டுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்து இருப்பதாக கண்டறிந்துள்ளனர். நமது நாட்டில் நெடுங்காலமாகவே நீரிழிவு நோய்க்கு கற்றாழை சாறு மருந்தாக உட்கொள்ள நமது பாரம்பரிய மருத்துவத்தில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.