தமிழகத்தில் இன்று மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகின. அதில், தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,22,350ல் இருந்து 1,26,581 அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 41,038 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான பரிசோதனை இதுவரை 14,28,360 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை கொரோனா பாதித்த 78,161 பேர் மீண்டுள்ளனர். இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 61.75 % பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 1,765-ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 46,652 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று மட்டும் 1,216 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது.