ஜம்மு- காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு – காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசகார வேலைகளில் ஈடுபட்டு பயங்கரவாதிகளை ஒழிக்க, காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து கூட்டுப்படைகளாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. சமீபகாலமாக நடந்த தேடுதல் வேட்டையின் போது நிறைய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, வெடி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தநிலையில், புல்வாமா மாவட்டம் கூசு என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை அந்த பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.