Categories
அரசியல் மாநில செய்திகள்

பிள்ளையார் சுழி போட்ட ஸ்டாலின்… வச்சு செய்த உப்பிஸ்…. ட்ரெண்ட் ஆன அதிமுக ….!!

தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே தொடரும் என புதிய பாடத்திட்டம் முறை ரத்து செய்யப்படுவதாகவும், பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.புதிய அரசாணையின்படி ஆறு பாடங்கள் என்ற பழைய நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அரசாணையை பகிர்ந்துள்ள முக.ஸ்டாலின், குளறுபடியானது – ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது! மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி! என்று பதிவிட்டுள்ளார்.

முக.ஸ்டாலினின் இந்த ட்விட் பதிவை தொடர்ந்து அவர் குறிப்பிட்ட ‘வாபஸ்’ பழனிசாமி என்ற வார்த்தையை அனைவரும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #வாபஸ்_பழனிசாமி என்ற ஹேஸ்ட்டாக்கில் தமிழக அரசு இப்படி ஒவ்வொரு முறையும் மாறி மாறி பேசுகிறது… மாறி மாறி முடிவடைகிறது… என்பதை விமர்சிக்கும் வகையில் இணையவாசிகள் டுவிட்டரில் ஹேஷ்டகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இது ஆளும் அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் தமிழக அரசு பிறப்பித்த பல உத்தரவுகளில் பின்வாங்கியதை குறிப்பிட்டு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் முக.ஸ்டாலினும் திமுகவினருக்கு தான் காரணம் என ஆளும் கட்சியினர் கோபத்தில் இருக்கின்றனர்.

Categories

Tech |