Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி வாக்குவாதம்… தம்பியை கொன்று விட்டு தப்பி ஓடிய அண்ணன்..!!

திருவாடானை அருகே தம்பியை கத்தியால் குத்திக்கொன்று விட்டு, தப்பியோடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கோனேரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு பார்த்திபன் (தம்பி) மற்றும் வேலு (அண்ணன்) என 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், வேலுவின் மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். பார்த்திபன் வெளியூரில் வேலைசெய்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கை அடுத்து தற்போது வீட்டில் வசித்துவந்தார்.

அப்போது, சகோதரர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேலு பார்த்திபனை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.. இந்த சம்பவம் தொடர்பாக பார்த்திபனின் மனைவி வினோதினி அளித்த புகாரின் பேரில், திருவாடானை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான வேலுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |