மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவன் தாமாக முன்வந்து போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
திருப்பூர், காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய அப்துல் சமது என்பவர் தனியார் பனியன் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு நிஷா பானு என்ற மனைவி இருக்கிறார்… 26 வயதான நிஷா பானுவுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தான் அப்துல் சமதுவை திருமணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் தான் நேற்று இரவு அப்துல் வீடு திரும்பியபோது, நிஷா பானு யாரோ ஒருவருடன் போனில் பேசி வந்துள்ளார்.. அப்துல் சமது வந்தவுடன் போனை கட் செய்துவிட்டார்.. இதன் காரணமாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நிஷா பானு கையில் இருந்த செல்போனை கணவன் அப்துல் பறிக்க முயன்றுள்ளார். ஆனால் மனைவி நிஷா செல்போனைக் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அப்துல் அருகிலிருந்த குக்கரை எடுத்து நிஷாவின் தலையில் பலமாக ஓங்கி அடித்துள்ளார். இதில் சுருண்டு கீழே சரிந்து விழுந்துள்ளார் நிஷா.. பின் அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டார் அப்துல்.. பின்னர் சிறிது நேரம் கழித்த பிறகு நடந்ததை உணர்ந்த அப்துல், நேராக திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்ததை கூறி சரணடைந்தார்.
இந்த சம்பவம் நடந்தது திருப்பூர் தெற்கு காவல் நிலைய பகுதிக்கு உட்பட்டது என்பதால், அவரைப் போலீசார் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நிஷா பானுவின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாமாக சரணடைந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட அப்துல் சமது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.