Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது. தமிழகத்தில் 3,761பேரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 179 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது நாளையுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக மருத்துவ குழு அரசுக்கு பரிந்துரை வழங்க உள்ளது.

மாவட்டங்களில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை நீட்டிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |