Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் ரம்மி… ரூ 10,50,000-ஐ பறிகொடுத்த மகன்… அதிர்ச்சியில் தந்தைக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி..!!

ஆன்லைனில் சீட்டாடி ரூ. 10 லட்சத்து 50 ஆயிரத்தை பறிகொடுத்ததால் நெஞ்சுவலி ஏற்பட்டு தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

விக்கி சலேக்பல் திகன் என்ற 24 வயது இளைஞர் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் ஜெய் பவானி சாலையில் வசித்து வருகின்றார். இவர் சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ 10,50,000 கையாடல் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தபுகார் குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் கிடைத்தது. அதன்படி விக்கியை அவர்கள் கைது செய்தனர்.. ஆம், பணத்தை கையாடல் செய்ததே புகார் கொடுத்த விக்கிதான்.. தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து 10.50 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைனில் ரம்மி ஆடுவதற்கு பயன்படுத்தியுள்ளார்.. அதில் தோல்வியடைந்து, மொத்த பணத்தையும் பறிகொடுத்துள்ளார். தன் தந்தையை நம்ப வைப்பதற்கு இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

விக்கியின் தந்தை தன்னுடைய சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் இருக்கும் வீட்டை விற்பனை செய்து பெற்ற ரூ 18 லட்சத்து, 59ஆயிரம் பணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருப்பு வைத்துள்ளார். இந்த பணத்தை வைத்துக் கொண்டு தான் நாசிக்கில் ஒரு வீட்டை வாங்குவதற்கு  விக்கியின் தந்தை திட்டமிட்டு இருந்தாராம்.. இந்தச் செய்தியை கேட்ட அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட, மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Categories

Tech |