Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5.64 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,53,558 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.15.87 கோடி அபராதம் வசூலாகியுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். இதுவரை 5,64,823 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் 6,90,214 வழக்குகள் பதிவாகியுள்ளன.

Categories

Tech |