Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 68 பேர் உயிரிழப்பு… 1,000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 68 பேரில் 8 பேருக்கு உடலில் வேறு எந்த நோயும் இல்லை என தகவல் வெளியாகியள்ளது. இன்று 2,737 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 44,097ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என மொத்தம் 89 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 33,213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 34,805 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்தவர்களில் 2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள், திருநங்கை ஒருவர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட 3,796 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 65,213 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 9,326 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |