Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,956 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 51,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என மொத்தம் 89 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 33,213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 34,805 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 10,77,454 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்தவர்களில் 2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள், திருநங்கை ஒருவர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 48,346 ஆண்கள், 29,968 பெண்கள், 21 திருநங்கைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |