பட்டுக்கோட்டை அருகே பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்துள்ள கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு, சுந்தரி என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு சண்முகப்பிரியா (வயது 23), கௌசல்யா(22), சந்தியா (21), கௌசிகா(19) என 4 பெண் குழந்தைகளும், ராஜ வசந்தசேனன்(19) என்ற மகனும் உள்ளனர்.
மேலும், சக்திவேலின் மகள்கள் மற்றும் அவரது மகனும் உடலில் பலத்த காயங்களுடன், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய குபேந்திரன் குடும்பத்தினரும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதன்பின் இந்தசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பட்டுக்கோட்டை வட்ட போலீசார், இளம் பெண்ணின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.