நாடு முழுவதும் கொரோனா வைரசால் குணமடைந்தோர் விகிதம் 58.24% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனவால் 4.9 லட்சம் பேர் பாதித்த நிலையில், 2.8 லட்சம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், கொரோனா தொற்று நோய் பாதிப்பால் தற்போது வரை 1,89,436 பேர் சிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,15,446 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை இந்தியாவில் 77,76,228 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 407 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல, கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,301 ஆக உயர்ந்துள்ளது.