Categories
தேசிய செய்திகள்

 வன்கொடுமை செய்யப்பட்ட பெண்… நைட் தூங்கிவிட்டு காலையில் புகாரளிப்பாரா?… விமர்சனம் செய்த நீதிமன்றம்..!!

பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடன் பணிபுரிந்து வரும் ஒருவர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர், பெங்களூரு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.. ஆனால், பெங்களூரு நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.  இதன் காரணமாக அடுத்தப்படியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தை அவர் நாடினார்‌.

இந்தநிலையில், இந்தவழக்கானது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.. வழக்கை விசாரித்த நீதிபதி, ”புகாரளித்த பெண்தான் அந்த நபரைப் பணி நியமனம் செய்துள்ளார்.. இந்தநிகழ்வு நடைபெற்ற தேதியில் இரவு 11 மணிக்கு எதற்காக ஒருவருடன் காரில் அந்தபெண் நிறுவனத்திற்குச் செல்ல வேண்டும்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த நபருடன் எதற்கு மது குடிக்க வேண்டும்.. ஆபத்தானவர் என்று நினைத்திருந்தால் முன்பே எச்சரித்து இருக்கலாமே. திருமணம் செய்து கொள்ளும் ஆசையில்தான் நெருக்கமாக இருந்துள்ளார்.. அதுமட்டுமின்றி அசதியில் காலை வரை தூங்கிவிட்டு பொறுமையாக அடுத்த நாள் வந்து புகார் அளிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.. இது இந்தியப் பெண்களிடம் பார்க்கவே முடியாத செயல்” எனச் சரமாரியாகக் கேள்வியெழுப்பினார்.. இதைத் தொடர்ந்து, குற்றம் சுமத்தப்பட்ட அந்த நபருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

Categories

Tech |