Categories
மாநில செய்திகள்

புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களிலும், அடுத்த 48 மணி நேரத்தில் 3 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது.

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா, வடமேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் ஜூன் 27ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. மேலும் வரும் 27, 29ம் தேதிகளில் அரபிக்கடல் மற்றும் குஜராத் கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |