ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்கு தான் தயார் என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்
தென் அமெரிக்க நாடான எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பங்களும் நிகழ்ந்து வருகின்றது. அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதரோவின் ஆட்சிக்கு நெருக்கடி தொடர்ந்து வருகின்றது. இதனிடையே நாடாளுமன்றத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ஜூவான் குவைடா தன்னை அதிபராக பிரகடனம் செய்துள்ளார். இதனையடுத்து நாட்டில் நடக்கும் அரசியல் குழப்பத்திற்கு அமெரிக்காவே முழு காரணம் என நிக்கோலஸ் குற்றம்சாட்டி அதிபர் ட்ரம்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது நிக்கோலஸ் அதிபர் பதவியிலிருந்து விலகுவது பற்றி மட்டுமே நான் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தேவைப்பட்டால் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அந்தப் பேச்சுவார்த்தை மரியாதைக்குரியதாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.