அரசு மருத்துவமனையில் தவறாக நடக்க முயன்ற வாலிபரை பெண் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் இருக்கும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள பிரசவ வார்டு எதிரில் கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் காத்திருப்பது வழக்கம்.. அதன்படி இங்கு 40 வயதுடைய பெண் ஒருவர் காத்திருந்தபோது, அவரை வாலிபர் ஒருவர் சுற்றிசுற்றி வந்துள்ளார்.
அவரிடம் தவறாக நடப்பதற்கு முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், கடுமையாக திட்டி காலில் கிடந்த செருப்பைக் கழட்டி அந்த இளைஞரை பளார் பளார் என்று ஒங்கி கண்ணத்தில் அறைந்து விட்டார்.
இதில் வலி தாங்க முடியாமல் அலறித்துடித்த அந்த வாலிபரை, அவர் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.. இந்த விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கண்ணமங்கலத்தை அடுத்துள்ள கம்பம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் (வயது 32) என்பது தெரியவந்தது.