தமிழகம் முழுவதும் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சென்னையில் 1,254, செங்கல்பட்டில் 180, திருவள்ளூரில் 131, காஞ்சிபுரத்தில் 87, மதுரையில் 90, திருவண்ணாமலையில் 130, ராமநாதபுரத்தில் 49, ராணிப்பேட்டையில் 68, தூத்துக்குடியில் 46, கடலூரில் 16, சேலத்தில் 47, விழுப்புரத்தில் 23, வேலூரில் 36, நெல்லையில் 28, தஞ்சையில் 10, கோவையில் 11, விருதுநகரில் 10, அரியலூரில் 7,
தர்மபுரி 2, திண்டுக்கல்லில் 6, கள்ளக்குறிச்சி 4, கன்னியாகுமரியில் 15, கரூரில் 1, கிருஷ்ணகிரியில் 6, நாகையில் 4, பெரம்பலூரில் 3, புதுக்கோட்டையில் 10, சிவகங்கையில் 32, தேனி மற்றும் தென்காசியில் 8, திருப்பத்தூர் 11, திருச்சியில் 23, திருவாரூரில் 2, திருப்பூரில் 1 என 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மேலும், நாமக்கல், ஈரோடு, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இன்று புதிதாக ஏற்படவில்லை. இன்று பிறமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 49 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 12, கர்நாடகாவில் 6, கேரளாவில் 4, கோவாவில் இருந்து தமிழகம் வந்த 3 பேர், அசாம் மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேபோல வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமனில் இருந்து வந்த 14 பேர், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.