திருமணமான பின் கணவருடன் காரில் சென்ற புதுமணப்பெண் திடீரென கீழே இறங்கி ஆற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத் என்பவரின் மகள் அஞ்சு சைனி.. இவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு 3 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் புகுந்த வீட்டிற்கு கணவர் மற்றும் குடும்பத்தாருடன் காரில் மணப்பெண் அஞ்சு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலத்தின் எல்லையிலுள்ள பாலி பாலம் அருகே கார் சென்றபோது தனக்கு வாந்தி வருவதாக கூறிய அஞ்சு டிரைவரிடம் காரை நிறுத்தச் சொன்னார்..
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் நீச்சல் தெரிந்த நபர்களுடன் அங்கு வந்து, பின்னர் நீண்டநேர தேடுதலுக்கு பிறகு அஞ்சுவை சடலமாக ஆற்றிலிருந்து மீட்டனர்.. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கூறுகையில், “அஞ்சு சம்மதம் தெரிவித்த பிறகு தான் அவருக்கு இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.. மகிழ்ச்சியான மன நிலையில் இருந்த சூழலில் தான் அஞ்சு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.