தூத்துக்குடி அருகே காதல் தோல்வியில் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை கீழ செக்காரக்குடி பகுதியில் வசித்து வரும் காவலர் ஒருவர் இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கான காரணமாக காதல் தோல்வி கூறப்படுகிறது.இவர் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அது தோல்வி அடையவே, ஏற்பட்ட மன விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.