Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு நாளை விசாரணை!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.

மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக மற்றும் பாமகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது.

இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக , பாமகவினர் தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளது. அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

இந்த வழக்கை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்து கொள்ள கோரி திமுக வழக்கறிஞர் வில்சன் முறையிட்டார். மேலும் பாமகவின் அன்புமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலுவும் இடஒதுக்கீடு வழக்கை விசாரிக்க கோரினார். இருவரின் முறையீட்டையும் ஏற்ற நீதிபதி சுப்பையா அமர்வு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக அறிவித்துள்ளனர்.

Categories

Tech |