கொல்கத்தா அணி 16ஓவர் முடிவில் 153/3 ரன்களுடன் விளையாடி வருகிறது.
ஐ.பி.எல்லில் இன்று 6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது . இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். சுனில் நரேன் வருண் சக்கரவர்த்தி வீசிய 2வது ஓவரில் 3 சிக்ஸர் 1 பவுண்டரி என அந்த ஓவரில் 26 ரன்கள் விளாசினார். இதையடுத்து சமி வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விளாசி கிறிஸ் லின் ஆட்டமிழந்தார். இதையடுத்து உத்தப்பா களமிறங்கினார். அதன் பின் சுனில் நரேன், வில்யோன் ஓவரில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ராணாவும், உத்தாப்பாவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பஞ்சாப் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஓருபுறம் உத்தப்பா பொறுப்பாக விளையாட மறுபுறம் ராணா ருத்ர தாண்டவம் ஆடினார்.இதையடுத்து வருண் சக்கரவர்த்தி ஓவரில் ராணா 63 ரன்களில் அவுட் ஆனார். தற்போது ரசல் களமிறங்கி விளையாடி வருகிறார்.