Categories
அரசியல் மாநில செய்திகள்

இங்க தான் இருக்காங்க…. நீங்களே கேளுங்க… மாஸ் காட்டிய விஜயபாஸ்கர் …!!

களப்பணியாளர்கள் ஊக்கப்படுத்தனும் என்று சொல்கீறீர்கள், இப்ப 2000 செவிலியர்களை நியமித்துள்ளீர்கள். ஏற்கனவே நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு போதிய ஊதியம் இல்லை என்று ஓமந்தூரார் மருத்துவமணையில் போராட்டம் நடைபெற்றது என்ற கேள்வி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்கப்பட்டது. அப்போது, ஸ்டாப் இருக்காங்க கேளுங்க… நீங்களா எதையும் சொல்லக்கூடாது. செவிலியர்கள் கூடுதலாக வேண்டும் என்று சொன்னார்கள், சொன்னவுடனே செவிலியர்கள் 2000 பேரை நியமிக்கின்றோம், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்.

அசோசியேஷன் இங்கதான் இருக்காங்க… காளியம்மாள் இருக்கிறாங்க… செந்தில் இருக்கிறாங்க என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர் என்னமா..! என்னனு சொல்லுங்க ? என்று அந்த இடத்திலேயே கேட்டு பத்திரிகையாளர் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இன்னும் கூடுதலாக பணியாளர்களை நியமனம் பண்ணனும்னு சொன்னாங்க அதனாலதான் 2000 பேரை நியமனம் செய்கின்றோம்.  ஒரு மருத்துவமனைக்கு 400 பேர் போறாங்க, இன்னைக்கே அவர்கள் பணியில் சேர்கின்றார்கள். எவ்வளவு தேவையோ, அதை அரசு செய்ய தயாராக இருக்கின்றது. அந்த தேவை அப்படிங்கிற ஒரு கோரிக்கையை நீங்கள் போராட்டம் என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது.

கொரோனா நோயாளிகளை ஐந்து நாட்களுக்குள் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் எக்ஸிட் டெஸ்ட் எடுப்பதில்லை எவ்வளவு நாள் எங்களை மருத்துவமனையில் வைத்திருக்கலாம் ? எவ்வளவு நாள் எங்களை வீட்டில் வைத்திருக்கலாம் என்ற அறிவுறுத்தல் கிடைப்பதில்லை என்ற கேள்விக்கு ?

எக்ஸிட் டெஸ்ட் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டல் படி தான் நாம் பண்ணிக்கிட்டு இருக்கின்றோம். 14 நாட்கள் ஒரு நோயாளியை வைத்துள்ளோம். 14 நாளில் ஒரு டெஸ்ட் எடுப்போம். அது நெகட்டிவ் வரணும், திரும்ப 24 மணி நேர இடைவெளியில் இன்னொரு டெஸ்ட் எடுப்போம். அதுவும் நெகட்டிவ் வந்தால் தான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டல் மாற்றப்பட்டது. எக்ஸிட் டெஸ்ட்  தேவையில்லை என்று மத்திய அரசு சொன்னாங்க. எக்ஸிட் டெஸ்ட் வேண்டாம் என்று சொன்னாலும் கூட முதலில் 14 நாட்கள் நாம் சிகிச்சை அளிக்கும் போது கூட சில நோயாளிகள் 21 நாள் 30 நாள் வரைக்கும் பாசிட்டிவாக இருந்துள்ளார்கள். அவர்களை நாங்க நெகட்டிவ் பண்ணி தான் அனுப்பி வைத்தோம்.

ஒவ்வொருவரின் உடல்நிலையை பொறுத்து மாறும். உடலில் இருக்கக்கூடிய ஆன்டிபாடி டெவலப்மெண்ட் பொறுத்து மாறும். இப்போ எக்ஸிட் டெஸ்ட் தேவையில்லை என்று சொல்லிட்டாங்க. தேவை இல்லைன்னு சொன்னாலும் கூட அதில் 3 நாட்கள் காய்ச்சல் இருக்க கூடாது அப்படின்னு சில வழிகாட்டுதல்கள் இருக்கின்றது. எக்ஸிட் டெஸ்ட்இல்லை என்றாலும் கூட ஒரு சில நோயாளிகளை  ஒரு டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் என்று வந்த பிறகு தான் அனுப்புறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

Categories

Tech |