தமிழகம் முழுவதும் இன்று சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் 1243, செங்கல்பட்டில் 158, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 19, நெல்லையில் 10, விழுப்புரத்தில் மற்றும் விருதுநகரில் தலா ஒருவர், அரியலூரில் 3, தூத்துக்குடியில் 10, மதுரையில் 16, கன்னியாகுமரியில் 3, சேலத்தில் 3,திண்டுக்கல்லில் 6, கோவையில் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தலா ஒருவர், தேனியில் 2, தஞ்சையில் 8, திருச்சியில் 4, ராமநாதபுரத்தில் 6, வேலூரில் 16, கன்னியாகுமரியில் ஒருவர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் தலா 7, புதுக்கோட்டையில் 4, தர்மபுரியில் ஒருவர், என இன்று மட்டும் 1,685 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வந்த 31 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 6 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 13,219 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 6,21,171 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து 34,914 ஆக அதிகரித்துள்ளது.