88 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக வார்டுகளை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
கிண்டி கிங் இன்ஸ்டியூட் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல கிண்டியில் கொரோனா சிகிச்சை அளிக்க 81 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். கிண்டி சோதனை மையத்தில் தினமும் 1,500 கொரோனா பரிசோதனை நடத்த இயலும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்தார். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். சென்னை மாநகராட்சியில் சிசி சென்டர் மற்றும் ஹெல்த் சென்டர் ஆகியவற்றை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
மேலும் stop corona என்ற இணையத்தில் படுக்கை வசதிகள் போன்ற விவரங்கள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். மேலும் பல தனியார் மருத்துவமனைகள் stop corona இணையத்தில் படுக்கை வசதிகளை வழங்க முன்வந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.