Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி மருந்து தயாரித்தவுடன் அனைத்து நாடுகளுக்கும் விநியோகம் – சீன அமைச்சர் !

கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து தயாரித்து விட்டால் உலக நாடுகள் அனைத்திற்கும் விநியோகம் செய்வோம் என்று அமைச்சர் வாங் ஜிகாங் உறுதியுடன் கூறியுள்ளார்..

உலகளவில் கொரோனா தொற்றின் பாதிப்பினால்  பலியானோரின் எண்ணிக்கையும் 2 லட்சத்தை தாண்டி விட்டது. பல முன்னணி நாடுகளிலுள்ள விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேபோல சீன விஞ்ஞானிகளும் கொரோனாவை ஒழிக்க மருந்து தயாரிப்பில் தீவிரமாக களமிளங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வாங் ஜிகாங் கூறுகையில்,” தடுப்பூசி மேம்பாடு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பில் சீனா ஈடுபட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி மருந்து தயாரித்து விட்டால் உலக நாடுகள் அனைத்திற்கும் நாங்கள் உடனடியாக விநியோகம் செய்வோம் என்றார்.

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான எந்த விவரங்களையும் சீன அரசு மறைக்கவில்லை, சரியான நேரத்தில் வெளிப்படையான முறையில் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Categories

Tech |