ரூ.265.46 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்கள், சாலைகளை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்துள்ளார். தலைமை செயலகத்தில் இருந்து வேலூரில் ரூ.6.35 கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை அலுவலக வளாக கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவாரூரில் ரூ.34.33 கோடி மதிப்பிலான கட்டிடங்கள், பாலங்களை திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலையில் ரூ. 2.93 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
மதுரை காளவாசல் சந்திப்பில் ரூ.54.07 கோடியில் கட்டப்பட்ட சாலை மேம்பாலத்தை காணொலி மூலம் திறந்து வைத்துள்ளார். மேலும் நாமக்கல், திருப்பத்தூர், அறியலூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.211.39 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட பாலங்கள், பயிற்சி மைய கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.