Categories
மாநில செய்திகள்

ரூ.235.20 கோடியில் 13 மாவட்டங்களில் துணை மின் நிலையங்கள் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் மற்றும் 13 மாவட்டங்களில் ரூ.235.20 கோடியில் கட்டப்பட்ட 16 துணை மின் நிலையங்கள் உட்பட பல்வேறு கட்டுமானங்களை முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், 6,000 குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 1000 குடியிருப்புகள் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி – விளாத்திகுளத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

நாமக்கல் – ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார். எமப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கிலோ துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார். 12 மாவட்டங்களில் மேலும் ரூ. 224.91 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 15 துணை மின் நிலையங்களையும் திறந்து வைத்தார்.

Categories

Tech |