Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா உறுதி… 1,000ஐ தாண்டிய பாதிப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1000பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 443 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 545 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மேலும் 45 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு அருகில் இருக்கும் புறநகர் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் 121 பேர், தாம்பரம் 118 பேர், பரங்கிமலை 120க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்லாவரம் பகுதியை சேர்ந்த டிஎஸ்பி ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 6 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

தாம்பரம் பகுதியை சேர்ந்த அரிசி கடை வியாபாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் குடும்பத்தை சேர்ந்த 4 பேர், அப்பகுதியில் இருக்கும் சிறுவன் மற்றும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டில் சமூக பரவல் ஏற்படாமல் தடுக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் திரும்பிய வண்ணம் இருப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே, கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பரவி செங்கல்பட்டில் இதுவரை வருகிறது. கொரோனா பாதித்த 10 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். அதில் ஒருவர் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் வீடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |