Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 50ஆக உயர்வு!

புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. முந்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கியானது 49ஆக இருந்தது.

இந்த நிலையில் மேலும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகையானது 50ஆக உயர்ந்துள்ளது.அதில் புதுச்சேரியை சேர்ந்த 44 பேரும், தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாற தொடங்கிவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் கூறியுள்ளார். மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |