Categories
மாநில செய்திகள்

காவல் அவரச சேவைக்கு இனி 100, 112 -ஐ அழைக்கலாம்: கோளாறு சரிசெய்யப்பட்டது…. காவல்துறை!!

தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர சேவைக்கு இனி 100 மற்றும் 112 ஆகிய இரு எண்களையும் அழைக்கலாம் என தமிழக காவல்துறை தகவல் அளித்துள்ளது.

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களது கைபேசியில் இருந்து 100 மற்றும் 112-ஐ இனி அழைக்கலாம். காவல்துறை அவசர அழைப்பு எண் 100, 112 தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியானது.

BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக Airtel, Vodafone மற்றும் jio வாடிக்கையாளர்களின் கைபேசியில் இருந்து காவல் அழைப்பு எண் 100/112 அழைப்புகளை காவல் கட்டுப்பாடு அறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்கள் தற்காலிகமாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில், இந்த கோளாறு சரிசெய்யப்பட்டதன் காரணமாக மக்கள் அவரச அழைப்புக்கு 100 மற்றும் 112-ஐ தொடர்புகொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |