இலங்கை கடற்படையினர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களின் 2 படகுகளையும் ,11 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே படகில் சென்று மீன்பிடிப்பது அவர்களது வழக்கம் . அப்போது எதிர்பாரத விதமாக இலங்கை எல்லைக்குள் செல்வதும் உண்டு. மேலும் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்து வருகிறார்கள். அவர்களின் விசைப் படகுகளையும் சேதப்படுத்தி கைது செய்கிறார்கள்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும் மற்றும் 2 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர்.கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற சில நாட்களாக மீனவர்கள் சிறைபிடிப்பு ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் இலங்கை கடற்படையினர் தங்கள் அட்டூழியத்தை தொடர்ந்திருப்பதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர் .