பெங்களூர் அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70ரன்களில் சுருண்டது.
12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. இதையடுத்து டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே பெங்களூரு அணி தடுமாறியது.
ஹர்பஜன் பந்து வீச்சில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட விராட் கோலி 6 (12) ம், மொயின் அலி 9, டிவில்லியர்ஸ் 9, ஹெட் மேயர் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் வெளியேறினர். சிவம் டுப் 2, கிராண்ட் ஹோம் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 17.1 ஓவரில் 70 ரன்களில் சுருண்டது . அதிகபட்சமாக பார்திவ் பட்டேலும் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சென்னை அணியில் ஹர்பஜன் 3, இம்ரான் தாஹிர் 3,விக்கெட்டுகளும் ஜடேஜா 2, பிராவோ 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தற்போது சென்னை அணி களமிறங்கியுள்ளது