Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று மட்டும் 363 பேர் கொரோனாவால் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 5,637 ஆக உயர்வு!

சென்னையில் இன்று மட்டும் 363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 363பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,637ஆக உயர்ந்துள்ளது. இன்று 253 ஆண்கள், 194 பெண்களும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 6,389 ஆண்கள், 3,282 பெண்கள் மற்றும் மூன்று திருநங்கைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 66ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு மருத்துவ வசதி, முன்கூட்டியே நோயை கண்டறிந்தால் தமிழகத்தில் கொரோனோவால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளது என அவர் தகவல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 64 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,240ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.15% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தற்போது 7,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 2,80,023 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 11,773 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |