Categories
அரசியல்

கொரோனா சோதனை, தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:

* அடுத்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே சோதனை செய்யப்படும்.

* தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதி; இல்லையெனில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்

* வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து, உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

* ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும்.

* மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

* கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்களுக்கு, மருத்துவமனை வருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

* 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

Categories

Tech |