Categories
தேசிய செய்திகள்

4வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பா?: பிரதமர் தலைமையிலான மாநில முதல்வர்கள் ஆலோசனை தொடங்கியது!!

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனையில் முதல்வருடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சண்முடம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கொரோனாதடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன் மற்றும் உயரதிகளரிகளும் பங்கேற்றுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த ஆலோசனையில் நாட்டில் 3-வது கட்டமாக கொண்டுவந்துள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுதலுக்கான வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குதல், விதிகளைத் தளர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் கூறப்படுகிறது. இ்ந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |