Categories
Uncategorized மாநில செய்திகள்

ஒரு கையில் கபசுர குடிநீர்… மறு கையில் மது – தமிழக அரசு குறித்து உயர்நீதிமன்ற கிளை விமர்சனம்!

ஒரு கையில் கபசுர குடிநீர்… மறு கையில் மது என டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கின் போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக மதுரையை சேர்ந்த போனிபாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று பிரகாஷ் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக் விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒரு கையில் கபசுர குடிநீரும், மறு கையில் மதுவும் வைத்திருக்கிறது தமிழக அரசு என குறிப்பிட்டுள்ளனர். தமிழக அரசின் செயல் முரண்பாடாக உள்ளதே? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என தெரிவித்துள்ளது. முன்னதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழக அரசு அறிவித்தபடி சென்னையை தவிர 7ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.

இதன் சூழலில் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளித்ததற்கு எதிராக மக்கள் நீதி மய்யம், மேலும் சில வழக்கறிஞர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |