Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செல்பி மோகத்தால் சிக்கிய நடிகை …!!

 நடிகை நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள்  புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பலரும் கண்டித்து வருகின்றனர். 

‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம்  அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.இவர் தமிழ் சினிமாவில்  ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் புதிதாக தமிழ் படங்கள்  மற்றும்   தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  நிவேதா பெத்துராஜ்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு பக்தியுடன் சாமி கும்பிட்டார் . பின்னர் கோவிலுக்குள் கையில் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு, கோவில் தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்தும் சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

Image result for நிவேதா பெத்துராஜ்

இவர் வெளியிட்ட  புகைப்படங்கள் சர்ச்சையை உருவாக்கி உள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பத்தர்கள்  செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தீவிர  சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிப்படுகிறார்கள். இதையும் மீறி கோவிலுக்குள் நிவேதா பெத்துராஜ்  செல்போனை கொண்டு சென்று புகைப்படம் எடுத்ததை சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர் .

Categories

Tech |