தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது.
மேல்முறையீடு – கண்டனம்:
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் மதுக்கடைகளை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசு மதுக்கடைகளை திறக்க முயற்சி எடுக்க கூடாது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின், கமல், விஜயகாந்த்:
மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட போதும், சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட போதும் ரஜினி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். அதே போல உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சிக்கும் போது கூட முக.ஸ்டாலின், கமல், விஜயகாந்த் கண்டனம் தெரிவித்தனர்.
ரஜினிகாந்த்:
இந்த நிலையில் தான் அனைவரை விட லேட்டாக கருத்து சொன்னாலும் லேட்டஸ்ட்டாக அதிமுகவை கடுமையாக ரஜினி விமர்சனம் செய்துள்ளார். இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் என்று கடுமையாக அதிமுக அரசின் மீது பாய்ந்துள்ளார். இது ஆளும் தரப்பை கதிகலங்க வைத்துள்ளது.
அரண்டுள்ள அதிமுக:
நடிகர் ரஜினிகாந்த பொதுவாக ஒரு விஷயத்துக்கு கருத்து சொன்னால் பட்டும், படாமலும் பேசுவார். அரசுக்கு எதிராக அவ்வளவு எளிதாக பேச மாட்டார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவதிலும் கூட மாறுபட்ட கருத்து தெரிவித்த நிலையில் தற்போது நேரடியாக அரசை கடுமையாக சாடி கருத்து பதிவிட்டுள்ளதால் ஆளும் அரசு அரண்டு போயுள்ளது.
ரஜினி ட்விட்:
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020
ஸ்டாலின் ட்விட்:
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்கிறோம். மக்களின் உயிர் நலன் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம் அளித்த உத்தரவை திமுக வரவேற்கிறது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அதிமுக அரசு கைவிட வேண்டும். மக்களின் உயிரை பணையம் வைக்காமல் ஊரடங்கு நீர்த்துப்போகச் செய்யாமல் உத்தரவை ஏற்க வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நிர்வாகத் திறமையற்ற #குடிக்கெடுக்கும்_அதிமுக அரசுக்குத் தக்க பாடமாக, ஊரடங்கு காலம் முடியும் வரை மதுக்கடைகளை மூடவேண்டும் என்னும் உயர்நீதிமன்றத்தின் ‘மக்களைக் காக்கும்’ உத்தரவை திமுக வரவேற்கிறது.
மேல்முறையீட்டு முயற்சிகளைத் தவிர்த்து உத்தரவை ஏற்று அதிமுக அரசு நடக்க வேண்டும். pic.twitter.com/7HAAuRjNQX
— M.K.Stalin (@mkstalin) May 8, 2020
கமல் ட்விட்:
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்.
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம்
தமிழக அரசு.
எங்கும் வருவோம் உமைத் தடுக்க.
மக்கள் நீதியே வெல்லும்.— Kamal Haasan (@ikamalhaasan) May 9, 2020
விஜயகாந்த் ட்விட்:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது. மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது.மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும்,மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது.@CMOTamilNadu pic.twitter.com/1fzOMhg8UD
— Premallatha Vijayakant (@imPremallatha) May 8, 2020