நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வந்தது. அந்த போராட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அதில் சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் சில பேச்சுகளை முன்வைத்து இருந்தார்.
தற்போது அவரின் பேச்சுக்களின் அடிப்படை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ள்ளது. பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும், அரசுக்கு எதிராகவும் பேசிய பேசியதாகவும், இரு பிரிவினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் பேசியதாகவும் 153a என்ற பிரிவில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குனியமுத்தூர் காவல்நிலைய காவலர் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.