Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

12 பேரை கொன்னுட்டீங்க…! ”ஒழுங்கா 50 கோடி கொடுங்க” சாட்டையடி உத்தரவு …!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக  தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட இதனால் ஆலையை சுற்றியுள்ள 10 கிராமங்களில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். காற்றில் கலந்து பரவிய விஷ வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.

மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விஷவாயு காரணமாக உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பதிலளிக்க ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் தற்போது எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று  தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |