Categories
தேசிய செய்திகள்

திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி… மத்திய உள்துறை அமைச்சகம்..!

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு அதிகமாக திருமண விழாக்களில் மக்கள் கூட அனுமதி இல்லை என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். மேலும், நாட்டில் இறந்தவர்களின் இறுதி சடங்குகளில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். தற்போது செயல்பட்டு வரும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அதேபோல, அலுவலகத்தில் அதிகாரிகள் பயன்படுத்தும் அளவுக்கு போதுமான முக கவசங்கள், கிருமி நாசினிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அலுவலக பணியாளர்கள் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், ஊழியர்கள் ஆரோக்யா சேது செயலியில் பதிவு செய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு உத்தரவுகளை அவர் வெளியிட்டார்.

Categories

Tech |