திருமணமான மூன்று நாட்களிலேயே புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
வேலூர் மாவட்டத்தில் பெட்டி கடை வைத்துள்ள சங்கர்(45) என்பவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார் மகள் மகாலட்சுமி(20) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். மகாலட்சுமி சங்கரை விட 25 வயது சிறியவர். இருந்தும் பெற்றோர் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கடந்த 29ஆம் தேதி கோவிலில் வைத்து அவசர அவசரமாக திருமணத்தை முடித்துள்ளனர்.
திருமணம் முடிந்து கணவரின் வீட்டில் இரண்டு நாட்கள் மகாலட்சுமி இருந்த நிலையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். மகாலட்சுமி சடலமாக தொங்கியதை கண்டு சங்கரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமியின் சகோதரி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னைவிட 25 வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் இந்த முடிவை எடுத்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.