Categories
ஈரோடு திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து கால்நடைகளுக்கும் தேவையான தீவனங்கள்…. தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றது …!

கடந்த 2 நாட்களாக திருப்பூரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஈரோடு சென்னிமலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டம் விடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் வெளிமாநிலத்தவர் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

அதேபோல கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது எனவும் கூறினார். தமிழகத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தேவையான தீவனங்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

Categories

Tech |